top of page

பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் தவறிவிட்டது - மேற்கு வங்க முதல்வர் மம்தா

  • Writer: Web feathers
    Web feathers
  • Oct 7, 2021
  • 1 min read

பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் தவறி விட்டதாகவும் எனவே அந்த பொறுப்பை இந்திய மக்கள் தங்கள் தோளில் சுமத்தியுள்ளதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி பத்திரிகையில் டெல்லியின் அழைப்பு என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் காங்கிரஸால் பாரதிய ஜனதாவை 2 மக்களவை தேர்தலிலும் வீழ்த்த முடியாததால் அப்பொறுப்பை இந்திய மக்கள் தற்போது தங்கள் தோளில் சுமத்தியுள்ளதாக மம்தா கூறியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் பெற்ற அமோக வெற்றியால் அதன் மீது பிற மாநில மக்களுக்கும் நம்பிக்கை பிறந்திருப்பதாகவும் மம்தா பானர்ஜி தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸால் புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என இந்திய மக்கள் கனவு காண்பதாகவும் அக்கட்டுரையில் மம்தா தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்திற்கேற்ப பாரதிய ஜனதாவுக்கு எதிரான சக்திகளை ஓரணியில் திரட்ட தங்கள் கட்சி முனைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிரணிக்கு தலைமை தாங்குவது தங்கள் விருப்பம் இல்லை என்று கூறியுள்ள மம்தா, அதே நேரம் காங்கிரஸ் கட்சி தற்போதைய யதார்த்த சூழலை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் எதிரணியை வலிமையானதாக மாற்ற முடியும் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

பதிவு: புதிய தலைமுறை

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Web feathers | வலை சிறகுகள். Proudly created with Wix.com

bottom of page